திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதல்,கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் துறையின் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே யான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி கள் கடந்த 31-05-2020 அன்று இணைய வழி மூலம் நடைபெற்றது.இந்த இணைய வழி கட்டுரை போட்டியில் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த இரண்டாமாண்டு உயிர் தொழில்நுட்பவியல் பிரிவில் பயிலும் மாணவி J. பவித்ரா பங்கு பெற்று முதல் பரிசாக ரூபாய் 3000 பெற்றுள்ளார்.மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு. ம. ப.சிவனருள் ,மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் ,துணை கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் (04.07.2020) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடை பெற்றது.அந்த பாராட்டு மற்றும் அன்பின் உபசரிப்பு நிகழ்வில் மாணவி J .பவித்ரா இரண்டாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் துறை மாணவி கலந்து கொண்டு பரிசையும், வெற்றிக் கோப்பையும் பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.